தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

8வது முறையாக வரும் 15ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்: திருநெல்வேலி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்

சென்னை: பிரதமர் மோடி 8வது முறையாக வரும் 15ம் தேதி தமிழகம் வருகிறார். அன்றைய தினம் திருநெல்வேலியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பிரதமர் மோடி 7 முறை தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். கடைசியாக கடந்த செவ்வாய்க்கிழமை 2 நாட்கள் பயணமாக அவர் சென்னை வந்தார். சென்னை வந்த அவர் தி.நகரில் நடந்த ரோடு ஷோவில் பங்கேற்றார். தொடர்ந்து அவர் வேலூர், மேட்டுபாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
Advertisement

இந்நிலையில் பிரதமர் மோடி 8வது முறையாக வருகிற 13ம் தேதி (நாளை), 14ம் தேதி (நாளை மறுநாள்) என 2 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. தற்போது அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 13, 14ம் தேதிகளில் பிரதமர் மோடி மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் 13, 14ம் தேதிக்கு பதிலாக பிரதமர் மோடி வரும் 15ம் தேதி தமிழகத்திற்கு பிரசாரத்திற்கு வர உள்ளார்.

அன்றைய தினம் மாலை 3 மணியளவில் திருநெல்வேலி மக்களவை தொகுதி அம்பை சட்டமன்ற ெதாகுதி உட்பட்ட அகஸ்தியபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசுகிறார். திருநெல்வேலி தொகுதி பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து அவர் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இதேபோல அருகில் உள்ள தென்காசி, தூத்துக்குடி தொகுதி கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து அந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச வாய்ப்புள்ளது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் கடைசி பிரசார கூட்டம் இதுவாகும். இதனால், பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த பாஜவினர் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement

Related News