தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பல கோடி மோசடி: விரைவில் குற்ற பத்திரிகை தாக்கல்

 

Advertisement

புதுடெல்லி: பிரதமரிடம் வீடு கட்டும் திட்டத்தில் பல கோடி ரூபாய் மோசடி தொடர்பாக ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர் மீது விரைவில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது.

அரியானாவின்,குருகிராமை சேர்ந்த ஓஷன் செவன் பில்ட்டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை கடந்த மாதம் 13ம் தேதி ஓஷன் செவன் பில்ட்டெக்கின் நிர்வாக இயக்குனர் சுவராஜ் சிங் யாதவை கைது செய்தது.

இது குறித்து வட்டாரங்கள் கூறுகையில்,பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒரு வீட்டின் விலை ரூ.26.5 லட்சம். ஆனால், வீடு வாங்க பணம் செலுத்திய முன் பதிவு செய்தவர்களிடம் போலியான காரணங்களை கூறி ஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டு வேறு நபர்களுக்கு வீட்டுக்கு ரூ.50 லட்சம் வரை விற்று உள்ளனர். இதன் மூலம் ரூ.222 கோடி வசூலித்துள்ளனர். விரைவில் ஓஷன் பில்ட்டெக்கின் நிர்வாக இயக்குனர் மற்றும் இயக்குனர்கள் மீது குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தன.

Advertisement

Related News