தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரதமர் பதவியை நிராகரித்து விட்டேன்: நிதின் கட்கரி பரபரப்பு பேச்சு

நாக்பூர்: ‘நீங்கள் பிரதமர் பதவிக்கு வர விரும்பினால் ஆதரவு தருவோம்’ என எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் தன்னிடம் கூறியதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரும் ஒன்றிய அமைச்சருமான நிதின் கட்கரி நேற்று முன்தினம் நாக்பூரில் நடந்த பத்திரிகையாளர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசுகையில், ‘‘ஒரு சம்பவம் இப்போது என்னுடைய நினைவுக்கு வருகிறது. அந்த நபரின் பெயர், எப்போது நடந்தது என்பதை பற்றி கூற மாட்டேன்.
Advertisement

என்னிடம் ஒரு எதிர்க்கட்சி தலைவர், நீங்கள் பிரதமராக விரும்பினால் உங்களுக்கு நாங்கள் ஆதரவு தருவோம் என கூறினார். நான் அவரிடம் எதற்காக நீங்கள் என்னை ஆதரிக்க வேண்டும்; உங்கள் ஆதரவை நான் ஏன் பெற வேண்டும் என்று கேட்டேன். பிரதமர் பதவியில் அமர்வது என்னுடைய குறிக்கோள் இல்லை. என்னுடைய நம்பிக்கைக்கும் கட்சிக்கும் விசுவாசமாக உள்ளேன். என்னுடைய நம்பிக்கை முக்கியமானது. பதவிக்காக என்னுடைய நம்பிக்கையில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்.

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.பி.பர்தனை சந்தித்து பேசியுள்ளேன். விதர்பா பகுதியில் மிக பெரிய அரசியல் தலைவராக இருந்தவர் அவர். ஆர்எஸ்எஸ்சின் எதிர்ப்பாளராக அவர் இருந்தார். நேர்மையான எதிர்க்கட்சியை மதிக்க வேண்டும். நேர்மையாக எதிர்ப்பவர்களை மதிக்க வேண்டும்.

நேர்மையற்ற வகையில் எதிர்ப்பவர்களை மதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்கிற தன்னுடைய கொள்கையில் ஏ.பி.பர்தன் உறுதியாக இருந்தார். ஆனால் அரசியல் மற்றும் பத்திரிகையில் தற்போது அவரை போன்றவர்கள் இப்போது இல்லை. நீதித்துறை, நாடாளுமன்றம், நிர்வாக துறை மற்றும் மீடியா ஆகிய 4 தூண்களும் நெறிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே ஜனநாயகம் வெற்றியடையும்’’ என்றார்.

Advertisement

Related News