தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோயில் நகைகளை வங்கியில் அடமானம் வைத்த பூசாரி கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே கோயில் நகைகளை வங்கியில் அடமானம் வைத்த பூசாரியை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் திருச்சூர் அருகே முரிங்கூர் பகுதியில் நரசிம்மமூர்த்தி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கண்ணூர் மாவட்டம் அழிக்கோடு பகுதியை சேர்ந்த அஷ்வந்த் (34) பூசாரியாக இருக்கிறார். இவர் கடந்த 2020ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். கோயில் நகைகளை நிர்வாகிகள் இவரிடம் ஒப்படைத்திருந்தனர். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நகைகளை கணக்கெடுக்க வேண்டும் என்று பூசாரி அஷ்வந்திடம் கோயில் மேனேஜர் கூறினார். ஆனால் நிர்வாகிகள் அனைவரும் வந்தால்தான் நகைகளை காட்டுவேன் என்று அவர் கூறியுள்ளார். தொடர்ந்து நேற்று கோயில் நிர்வாகிகள் அனைவரும் சென்று நகைகளை கணக்கெடுக்க தீர்மானித்தனர்.

Advertisement

அப்போது தான் சில நகைகளை அருகில் உள்ள ஒரு வங்கியில் அடமானம் வைத்திருப்பதாக பூசாரி அஷ்வந்த் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த கோயில் நிர்வாகிகள் உடனடியாக அவரைப் பிடித்து கொரட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் காசு மாலை, வளையல் உள்பட 3 பவுன் கோயில் நகைகளை வங்கியில் அடமானம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பூசாரி அஷ்வந்த் இதற்கு முன்பும் பணிபுரிந்த 2 கோயில்களில் இதேபோல நகைகளை திருடி வங்கியில் அடமானம் வைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement

Related News