தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முன்னரே விலையை உயர்த்திய நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன் மக்களை சென்றடையவில்லை: காங். குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு முன்னரே பல பொருட்களின் விலையை பெருநிறுவனங்கள் உயர்த்தியதால், மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. ஜிஎஸ்டி சீர்த்திருத்தம் தொடர்பான ஊடக அறிக்கையை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். அந்த அறிக்கையில், ‘கடந்த 2ம் தேதி உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை ஒன்றிய அரசு 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்தது.

Advertisement

இதனால் நுகர்வோர் நேரடியாக பயனடைந்திருக்க வேண்டும். ஆனால் உண்மை இதற்கு நேர்மாறானது. வரி குறைப்பு பற்றி பெரு நிறுவனங்கள் தகவல் அறிந்த உடனே, முன்கூட்டியே தங்கள் பொருட்களின் விலைகளை 10 சதவீதம் வரை அதிகரித்தன. இதனால், ஜிஎஸ்டி வரி குறைப்பால் பொதுமக்களுக்கு சிறிய அளவில் மட்டுமே பலன் கிடைத்துள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

இதை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ஜெய்ராம் ரமேஷ், ‘‘சேமிப்பு விழா அல்ல, மோசடி விழா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சீர்த்திருத்தத்திற்கு பதிலாக பிரதமரின் விளம்பர நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி விகிதக் குறைப்புகளின் நன்மைகள் நேரடியாக பொதுமக்களைச் சென்றடையவில்லை என்றால், என்ன பயன்?’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

Advertisement