தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குமரி மாவட்டத்தில் ஈரப்பதத்தை காரணம் காட்டி நெல்லுக்கு விலை குறைப்பு

*விவசாயிகளுக்கு நஷ்டம்

Advertisement

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் வியாபாரிகள் ஈரப்பதத்தை காரணம் காட்டி நெல் விலையை குறைத்து வாங்குவதால், விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் மீண்டும் சாகுபடி பணியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

குமரி மாவட்டத்தில் தற்போது கன்னிப்பூ அறுவடை பணி முடியும் தருவாயில் உள்ளது. அறுவடை பணி முடித்த விவசாயிகள் கும்பப்பூ சாகுபடிக்கு வயல்களை பண்படுத்தி வருகின்றனர்.

கும்பப்பூ சாகுபடிக்கு நீண்ட நாள் நெல் பயிரான பொன்மணி ரக நெல்லை விவசாயிகள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பறக்ைக, சுசீந்திரம், தேரூர், புதுக்கிராமம், புத்தேரி உள்ளிட்ட பகுதிகளில் நாற்றங்கால் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. பறக்கை, சுசீந்திரம், தேரூர் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் நாற்றங்கால் தயாரித்து முடித்துவிட்டனர்.

நாற்று வளர்ந்து 24 நாட்கள் கடந்த பிறகு வயல்களில் நாற்று நடவு பணியை விவசாயிகள் மேற்கொள்வர். வயல்களுக்கு தேவையான அனைத்து உரங்களும் இருப்பு இருப்பதாக வேளாண்மை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் மானிய விலையில் வட்டார வேளாண்மை அலுவலகத்தில் விதை நெல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பெரும்பாலான விவசாயிகள் மானிய நெல் ரகத்தை வாங்கி சாகுபடி பணியை மேற்கொண்டு வருகின்றனர். சில விவசாயிகள் இரு பருவத்திலும் பயன்படுத்தப்படும் திருப்பதிசாரம் 5 ரக நெல்லை சாகுபடி செய்து வருகின்றனர். குமரி மாவட்டத்தில் வழக்கமாக கன்னிப்பூ அறுவடையின்போது விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்கும்.

கடந்த வருடம் ஒரு கோட்டை நெல், கொள்முதல் நிலையத்திற்கு நிகராக வெளி மார்க்கெட்டில் ரூ.2000 வரை விலை போனது. இதனால் விவசாயிகளுக்கு லாபம் கிடைத்தது. ஆனால் தற்போது நெல்லுக்கு போதிய விலை இல்லை. ஒரு கோட்டை நெல் ரூ.1700க்கு வியாபாரிகள் வாங்குகின்றனர். இதனால் விவசாயிகள் ஒரு கோட்டைக்கு ரூ.300 வரை இழக்கின்றனர்.

நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் ஈரப்பதம் இருந்தால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதற்கு மேல் இருந்தால், அதனை உலரவைத்து கொள்முதல் செய்யப்பட்டுகிறது. தற்போது வெளி மார்க்கெட்டிலும் ஈரப்பதத்தை காரணம் காட்டி விலையை குறைத்து விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்கின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: நெல் கொள்முதல் நிலையங்களில் அரசு நெல் ெகாள்முதல் விலையை உயர்த்தி வழங்கி வருகிறது. இதனால் அங்கு கொடுக்கப்படும் ஒரு கிலோ நெல்லிற்கு ரூ.25 கிடைக்கிறது.

அடங்கல், ஆதார், வங்கி புத்தக நகல் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். நெல்கொள்முதல் நிலையத்தில் நெல் கொடுத்து எடைபோட்ட மறுநாளே வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலான விவசாயிகள் வயல்களில் அறுவடை செய்த கையோடு தனியார் மில்களில் நெல்லை விற்பனை செய்து வருகின்றனர்.

உடனடியாக பணம் கிடைப்பதால், அதனை விவசாயிகள் ஆர்வமுடன் கொடுக்கின்றனர். ஆனால் தற்போது ஈரப்பதத்தை தனியார் வியாபாரிகளும் கடைபிடித்து வருகின்றனர். அவர்கள் 17 சதவீதத்திற்கு மேல் ஈரப்பதம் இருக்கும் பட்சத்தில் விலை குறைத்து கொள்முதல் செய்கின்றனர். தற்போது ஒரு கோட்டை ரூ.1700க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

ஈரப்பதம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் கோட்டைக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை குறைக்கின்றனர். இதனால் விவசாயிகள் அதிக படியான பணத்தை இழக்ககூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் கும்பப்பூ சாகுபடி பணிக்கு விவசாயிகள் ஆயத்தம் ஆகி வருகின்றனர். கும்பப்பூ அறுவடை பணி நடக்கும்போது நெல்கொள்முதல் நிலையயை கொள்முதல் விலைக்கு நிகராக வெளி மார்க்கெட்டிலும் விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

* குமரி மாவட்டத்தில் தற்போது கன்னிப்பூ அறுவடை பணி முடியும் தருவாயில் உள்ளது.

* வழக்கமாக கன்னிப்பூ அறுவடையின்போது விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்கும்.

* ஈரப்பதம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் கோட்டைக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை குறைக்கின்றனர். இதனால் விவசாயிகள் அதிக படியான பணத்தை இழக்ககூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Advertisement