தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு எதிரொலி அமெரிக்க எல்லையில் பாதுகாப்பு பணிக்கு 10,000 வீரர்களை மெக்சிகோ அனுப்பியது

Advertisement

சியுடாட் ஜூவாரெஸ்: அமெரிக்க எல்லையில் பாதுகாப்பு பணிக்கு 10,000 தேசிய காவல் வீரர்களை மெக்சிகோ அனுப்பி உள்ளது. கடந்த மாதம் 20ம் தேதி அதிபராக பொறுப்பேற்றதும் மெக்சிகோ, கனடா, சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தப்படும் என டிரம்ப் அறிவித்தார். சட்ட விரோத குடியேற்றம் மற்றுமு் போதை பொருள் கடத்தலை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக டிரம்ப் கூறினார். மேலும் அமெரிக்காவின் தெற்கு எல்லை பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

டிரம்பின் செயல்களை தொடர்ந்து மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷெயின்பாம்,‘‘ சட்ட விரோத குடியேற்றங்கள் மற்றும் போதை பொருள் கடத்தலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். எல்லையில் பாதுகாப்பு பணிக்கு தேசிய காவல் படையினர் அனுப்பப்படும்’’ என்று உறுதியளித்திருந்தார். இந்த நிலையில், அமெரிக்க-மெக்சிகோ எல்லை பகுதிகளுக்கு தேசிய காவல் படையை சேர்ந்த 10,000 வீரர்கள் நேற்றுமுன்தினம் அனுப்பப்பட்டனர். அமெரிக்க எல்லையை ஒட்டிய பகுதியான டிஜூவானா, சியுடாட் ஜூவாரெஸ் உள்ளிட்ட பல இடங்களில் மெக்சிகோவின் தேசியகாவல் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement