தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2026 முதல் அமலுக்கு வருகிறது புதிய வருமான வரி சட்டத்திற்கு ஜனாதிபதி முர்மு ஒப்புதல்: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கும் ஒப்புதல்

புதுடெல்லி: வருமான வரிச் சட்டம், 2025 என அழைக்கப்படும் இந்த சட்டம் சுமார் 64 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த பழைய வருமான வரிச் சட்டம், 1961 க்கு பதிலாக 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும். இந்த புதிய வருமான வரி மசோதா ஆகஸ்ட் 12 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் முக்கிய அம்சம், புதிய வரிகளை விதிக்காமல், பழைய சட்டத்தில் இருந்த 819 பிரிவுகளை 536 ஆகவும், 47 அத்தியாயங்களை 23 ஆகவும் குறைத்துள்ளது. வார்த்தைகளின் எண்ணிக்கையும் 5.12 லட்சத்தில் இருந்து 2.6 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த சட்டம் முதன்முறையாக 39 புதிய அட்டவணைகள் மற்றும் 40 புதிய சூத்திரங்களை அறிமுகப்படுத்துகிறது. இது வரி விதிகளைப் புரிந்துகொள்வதை எளிதாக்குகிறது. இந்த மாற்றங்கள், வரி செலுத்துவோருக்கு வரி விதிகளைப் புரிந்துகொள்வதில் இருந்த சிரமங்களைக் குறைத்து, வரி நிர்வாகத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கும் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதால் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் ரூ.1 கோடி அபராதம், 3 ஆண்டு சிறை தண்டணை விதிக்கப்படும்.

* பணிந்தது ட்ரீம் 11

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்தியாவின் முன்னணி ஆன்லைன் விளையாட்டு நிறுவனமான ட்ரீம் 11 தனது இணையதளம் மற்றும் செயலியில் பணம் கட்டி விளையாடும் விளையாட்டுகளை உடனடியாக நிறுத்தி உள்ளது.

Advertisement