தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜனாதிபதி விளக்கம் கேட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மிகவும் பிற்போக்குத்தனமானது: பிரசாந்த் பூஷண் விமர்சனம்

 

Advertisement

டெல்லி: ஜனாதிபதி விளக்கம் கேட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மிகவும் பிற்போக்குத்தனமானது என மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் விமர்சனம் செய்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பு கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலிஜிய பரிந்துரை மீது ஒன்றிய அரசு முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயித்திருக்க வேண்டும். ஒன்றிய அரசு தாமதித்தால் ஒப்புதல் அளித்ததாக கருதப்படும் என்றும் தீர்ப்பளித்திருக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் துணிச்சலான ஒரு அமர்வு அளித்த தீர்ப்பை இன்று அரசியல் சாசன அமர்வு தலைகீழாக மாற்றிவிட்டது. துணிச்சல் மிக்க உச்ச நீதிமன்ற அமர்வு மசோதா மீது ஆளுநர்கள் முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயித்தது.

நீதித்துறையின் சுதந்திரத்தையே ஒன்றிய அரசு அழிப்பதை உச்ச நீதிமன்றத்தின் அலட்சியம் அனுமதிக்கிறது. மசோதாவுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என அரசியல் சட்ட அமர்வு கூறியுள்ளது. காலவரையின்றி மசோதா மீது முடிவெடுக்காமல் ஆளுநர்கள் காலம் தாழ்த்துவதை தடுக்கும் வகையில் ஒரு அமர்வு தீர்ப்பளித்தது. காலவரையின்றி ஒரு மசோதாவை நிறுத்திவைத்தால் அது ஒப்புதல் அளித்ததாக கருதப்படும் என்ற தீர்ப்பையும் தலைகீழாக்கிவிட்டது. ஏவல் ஆட்கள் போல செயல்படும் ஆளுநர்கள் மாநில அரசுகளின் சட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டனர் என்றும் கூறினார்.

Advertisement

Related News