தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஈரானில் வரும் ஜூன் 28ம் தேதி அதிபர் தேர்தல்?.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Advertisement

தெஹ்ரான்: ஈரானில் ஜூன் 28-ல் அதிபர் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அஜர்பைஜானில் இருந்து நாடு திரும்பிய போது, மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி பலியானார். அவருடன் பயணித்த வெளியுறவு அமைச்சர் ஹுசேன் அமிரப்துல்லாஹியன் உள்ளிட்டோரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. அதிபர் ரைசி மரணத்தை தொடர்ந்து 5 நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக உச்ச தலைவர் காமனெயி அறிவித்துள்ளார்.

மசூதிகளில் கறுப்பு கொடி ஏற்றி துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அதிபர் ரைசி மறைவால் ஈரான் மக்கள் கடும் சோகத்தில் மூழ்கி உள்ளனர். ஈரான் அதிபர் மறைவுக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளன. ஈரான் அரசியலமைப்பின்படி, அதிபர் இறந்தாலோ அல்லது பதவியை விட்டு வெளியேறினாலோ, அடுத்த தேர்தல் நடக்கும் வரை துணை அதிபர் இடைக்கால அதிபராக பொறுப்பேற்பார். அதன்படி, தற்போதைய துணை அதிபர் முகமது முக்பரை இடைக்கால அதிபராக உச்ச தலைவர் காமனெயி நேற்று அதிகாரப்பூர்வமாக நியமித்தார்.

முகமது மொக்பர் தேர்தல் நடத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். 50 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் ஈரான் சட்டப்படி நீதித்துறை தலைவர், சபாநாயகருடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் ஜூன் 28-ல் ஈரான் அதிபர் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் சுப்ரீம் தலைவர் காமேனி அனுமதி அளித்தவுடன் தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement