தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாட்டில் 2 நாள் பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்னை வந்தார்: ஆளுநர்,துணை முதல்வர் வரவேற்றனர்

சென்னை: தமிழ்நாட்டில் 2 நாள் பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, மைசூரில் இருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் ரவி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றனர். இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, தமிழ்நாட்டிற்கு இரண்டு நாட்கள் பயணமாக, கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் நேற்று பகல் 11.40 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தார்.

Advertisement

சென்னை விமான நிலையத்தில் திரவுபதி முர்முவை, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர். மேலும் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னை மேயர் பிரியா, டி.ஆர்.பாலு எம்பி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், காவல்துறை பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், இந்திய ராணுவத்தின் முப்படை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் ஜனாதிபதியை வரவேற்றனர்.

சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு, ஜனாதிபதி திரவுபதி முர்மு காரில் ஜிஎஸ்டி சாலை வழியாக, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த சிட்டி யூனியன் பேங்க், 120வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஜனாதிபதி முர்மு வருகையை ஒட்டி, சென்னை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வர்த்தக மையம் செல்லக்கூடிய ஜிஎஸ்டி சாலை, கத்திப்பாரா, மேம்பாலம் உள்ளிட்ட இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு அவரது வாகனம் கடந்து செல்லும் வரையில் போக்குவரத்துநிறுத்தப்பட்டன.

Advertisement

Related News