தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜனாதிபதி திரௌபதி முர்மு முன்னிலையில் இந்தியா - அங்கோலா இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

 

Advertisement

அங்கோலா: அங்கோலா சென்றுள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு முன்னிலையில், மீன்வளம், கடல் வளங்கள், தூதரக விவகாரங்களில் இருநாடுகளும் ஒத்துழைப்பு அளிப்பது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்திய ஜனாதிபதி ஒருவர் ஆப்ரிக்க நாடான அங்கோலாவுக்கு சென்றது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி திரௌபதி முர்மு, ஜனாதிபதி ஜோவோ மானுவல் கோன்சால்வ்ஸ் லூரென்கோவுடன் பரந்த அளவிலான இருதரப்பு விவாதங்களை நடத்தினார். எரிசக்தி கூட்டாண்மை, உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, சுகாதாரம், விவசாயம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட ஒத்துழைப்பை ஆழப்படுத்த தொடர்ந்து இணைந்து பணியாற்ற இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

அங்கோலாவின் வளர்ச்சிப் பயணத்தில், இருதரப்பு ரீதியாகவும், இந்தியா-ஆப்பிரிக்கா மன்ற உச்சிமாநாட்டின் பரந்த கட்டமைப்பிலும் நம்பகமான பங்காளியாக இருப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தினார்.

இந்தியத் தரப்பில் ஜல் சக்தி மற்றும் ரயில்வே துறை இணையமைச்சர் ஸ்ரீ வி. சோமன்னா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீ பர்புபாய் நாகர்பாய் வாசவா மற்றும் டி. கே. அருணா மற்றும் மூத்த அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். மீன்வளம், மீன்வளர்ப்பு மற்றும் கடல் வளங்களில் ஒத்துழைப்பு; மற்றும் தூதரக விவகாரங்கள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இந்த நிகழ்வில் பரிமாறப்பட்டன.

Advertisement

Related News