தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கசப்பில் முடிந்த காதல் திருமணம்; கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆர்டிஓ விசாரணை

போடி: போடியில் காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், போடி சுப்புராஜ் நகரை சேர்ந்தவர் சக்திவேல் மனைவி ராஜேஸ்வரி (45). இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். சக்திவேல் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இவர்களது 2வது மகள் ரேணுகாதேவி (26). இவர் உறவினரான கூலித்தொழிலாளி ஆயுத்ராஜ் என்பவரை காதலித்தார். ஆனால் இதற்கு தாய் ராஜேஸ்வரி எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில், எதிர்ப்பை மீறி கடந்த மார்ச் 19ம் தேதி போடி அருகே தீர்த்ததொட்டி முருகன் கோயிலில் ரேணுகாதேவி, ஆயுத்ராஜ் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பின்னர், மதுரையில் வசித்து வந்தனர். இந்நிலையில், ரேணுகாதேவி கர்ப்பம் அடைந்தார்.

Advertisement

இதையடுத்து தம்பதியர் மதுரை வீட்டை காலி செய்துவிட்டு, கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு போடி அருகே ரெங்கநாதபுரத்தில் குடியேறினர். இருவரும் போடி அரசு போக்குவரத்து பணிமனை அருகே இட்லி கடை வைத்து நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது கர்ப்பிணி ரேணுகாதேவி தனது வீட்டில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அவரது தாய் ராஜேஸ்வரி போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து எஸ்.ஐ.க்கள் விஜய், மலைச்சாமி ஆகியோர் கர்ப்பிணி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், காதல் தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததும், இதனால் மனமுடைந்து ரேணுகாதேவி தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்துள்ளது. திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் பெரியகுளம் ஆர்டிஓ ரஜத் பீடன் விசாரணை நடத்தி வருகிறார். காதல் திருமணம் செய்துகொண்ட கர்ப்பிணிப் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் போடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement