தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியா குறித்த அவர்களின் கணிப்பு பொய்த்தது; இங்கிலாந்து பிரிவினை கட்டத்தில் இருக்கு!: ஆர்எஸ்எஸ் தலைவர் பரபரப்பு பேச்சு

இந்தூர்: சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா ஒற்றுமையாக நீடிக்காது என கணித்த வின்ஸ்டன் சர்ச்சில் போன்றவர்களின் கூற்றுகளை பொய்யாக்கி, இந்தியா வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருவதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு உரையாற்றினார்.

Advertisement

அப்போது அவர் பேசுகையில், ‘சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா என்ற நாடு ஒன்றுபட்ட நாடாக நீடிக்காது என்றும், மாறாக குழப்பம் மற்றும் பிரிவினையில் மூழ்கிவிடும் என்றும் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் கணித்திருந்தார். ஆனால் அவரது கணிப்பை பொய்யாக்கி, இந்தியா இன்றுவரை ஒன்றுபட்டு இருப்பது மட்டுமல்லாமல், தற்போது இங்கிலாந்துதான் ‘பிரிவினையின் கட்டத்திற்கு’ (நேற்று முன்தினம் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக லண்டனில் மாபெரும் போராட்டம் நடந்தது) வந்து கொண்டிருக்கிறது.

அனைத்து தவறான கணிப்புகளையும் தகர்த்தெறிந்து, இந்தியா நிலையான வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகிறது. பாரம்பரிய தத்துவமான அறிவு, செயல் மற்றும் பக்தி ஆகியவற்றின் சமநிலைப்படுத்தப்பட்ட கடவுள்களின் மீதான நம்பிக்கையே இந்தியாவின் வெற்றிக்கு காரணம். இந்தியா 3,000 ஆண்டுகளாக உலகத் தலைவராக இருந்தபோது, உலகளவில் எந்தவிதமான போராட்டங்களும் ஏற்படவில்லை. மற்ற நாடுகளைக் கைப்பற்றாமலோ அல்லது வர்த்தகத்தை அடக்காமலோ இந்தியா இந்த தலைமைத்துவத்தை அமைதியான முறையில் அடைந்தது. ஆனால், தற்காலத்தில் தனிப்பட்ட சுயநலன்களே மோதல்களுக்கு காரணமாக இருக்கின்றன. மனிதநேயத்தின் மேம்பாட்டிற்கு இந்த சுயநல நோக்கங்களில் இருந்து மாற்றம் ஏற்படுவது அவசியம்’ என்று கூறினார்.

Advertisement

Related News