தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறையில் நூலகத்தில் எழுத்தர் பணியில் பிரஜ்வல்: ஒரு நாளைக்கு ரூ.522 சம்பளம்

பெங்களூரு: பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் மஜத முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள நூலகத்தில் எழுத்தர் பணி செய்து வருகிறார். கர்நாடகாவின் ஹாசன் தொகுதி முன்னாள் மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான பிரஜ்வல் ரேவண்ணா, வீட்டு பணிப்பெண் உட்பட ஏராளமான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை விதிப்படி ஆயுள் தண்டனைக் கைதிகள் சிறையில் பணி செய்ய வேண்டும். ஆயுள் தண்டனைக் கைதிகள் சிறைப்பணிகளில் அவர்கள் தகுதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்ற பணிகளைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

Advertisement

அந்தவகையில், பிரஜ்வல் ரேவண்ணா தினசரி ரூ.522 சம்பளத்திற்கு சிறை நூலகத்தில் எழுத்தர் பணி செய்துவருகிறார். சிறை மூத்த அதிகாரி கூறுகையில், ‘பிரஜ்வல் ரேவண்ணா சிறை நூலக எழுத்தராக பணி செய்கிறார். அவருக்கு ஒருநாளைக்கு ரூ.522 சம்பளம். சிறை விதிப்படி, பிரஜ்வலுக்கு நூலக கிளர்க் பணி வழங்கப்பட்டிருக்கிறது. நூலக ரெக்கார்டுகளை பராமரிப்பதுதான் அவரது வேலை. பிரஜ்வல் நிர்வாகப் பணி செய்வதாக கோரிக்கை விடுத்தார். ஆனால் சிறை நிர்வாகம், அவருக்கு நூலகத்தில் பணி வழங்கியிருக்கிறது’ என்றார். வாரத்திற்கு குறைந்தது 3 நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்றார்.

Advertisement