தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிபிஎல் பிளே ஆப் செல்ல கடைசி வாய்ப்பில் மாகே: ஏற்கனவே 3 அணிகள் முன்னேற்றம்

புதுச்சேரி: பாண்டிச்சேரி பிரிமீயர் லீக்(பிபிஎல்) டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 6 அணிகள் களம் கண்டுள்ள இந்தப் போட்டியின் லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிகின்றன. பிளே ஆப் சுற்றுக்கு 4 அணிகள் முன்னேற வாய்ப்புள்ள நிலையில் ஏற்கனவே 3 அணிகள் முந்தி விட்டன.
Advertisement

இதுவரை தலா 9 ஆட்டங்களில் விளையாடி உள்ள வில்லியனூர் கிங்ஸ், ஏனாம் ராயல்ஸ், ஒயிட்டவுன் ெலஜண்ட்ஸ் ஆகிய 3 அணிகளும் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளன. இந்த 3 அணிகளும் தலா 9 வெற்றிகளுடன் தலா 12 புள்ளிகளை பெற்று முதல் 3 இடங்களில் இருக்கின்றன. எஞ்சியிருக்கும் ஆட்டங்கள் எந்த அணிக்கு எந்த இடம் என்பதை உறுதிச் செய்யும். முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக தகுதிச்சுற்றில் விளயைாட முடியும்.

இந்நிலையில் எஞ்சியிருக்கும் ஒரு இடத்துக்கான போட்டியில் மாகே ஸ்டிரைக்கர்ஸ், ஊசுடு வாரிய்ஸ், ஆகியவை களத்தில் உள்ளன. எஞ்சியுள்ள ஆட்டங்களில் ஒன்றில் தோற்றால் கூட இவை லீக் சுற்றுடன் வெளியேற வேண்டியதுதான். அதே நேரத்தில் மாகே தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஊசுடு அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றிப் பெற்றால் மாகே அணி எளிதாக 4வது இடத்தை உறுதி செய்து பிளே ஆப் சுற்றுக்கு கடைசி அணியாக முன்னேறும். அதே வேளையில் ஊசுடு வென்றால் அந்த அணி பிளே ஆப் வாய்பபை பெறும். காரணம் மாகேவை விட ஊசுடு ரன் ரேட் விகிதம் அதிகம்.

அதனால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் கடைசி அணி என்ற பரபரப்பு லீக் சுற்றின் கடைசி நாளான இன்று வரை தொடர உள்ளது. அதே நேரத்தில் நேற்று நடந்த 27வது லீக் ஆட்டத்தில் ஊசுடு அணி 5விக்கெட் வித்தியாசத்தில் காரைக்கால் அணியை காலி செய்தது. எனவே காரைக்கால் முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறுகிறது.

Advertisement

Related News