தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பல்லாவரம் அருகே பொழிச்சலூரில் கோயிலில் மாற்று திறனாளியை சாதி பெயரை சொல்லி காலால் எட்டி உதைத்த ஊராட்சி மன்ற தலைவரின் மகன்

Advertisement

பொழிச்சலூர்: செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அருகே பொழிச்சலூரில் மாற்றுத் திறனாளியை பொழிச்சலூர் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் தினேஷ் பாபு சாதி பெயரை சொல்லி திட்டி, காலால் எட்டி உதைத்துள்ளார். மாற்று திறனாளியை காலால் எட்டி உதைக்கும் அதிர்ச்சிகர சிசிடிவி காட்சி வெளியானது.

பல்லாவரம் அருகே பொழிச்சலூர், விநாயகா நகர், மாசிலாமணி தெருவை சேர்ந்தவர் ஞானமணி. இவர், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். இவரது மகன் சரவணன் (35). மாற்றுத்திறனாளி. நேற்று அப்பகுதியில் பிரசித்தி பெற்ற, மிகப் பழமையான அகத்தீஸ்வரர் கோயிலுக்கு மாற்றுத் திறனாளியான சரவணன் சென்றுள்ளார்.

கோயிலுக்குள் தற்போதைய பொழிச்சலூர் ஊராட்சி மன்றத் தலைவர் வனஜாவின் மகன் தினேஷ்பாபு (35) இருந்துள்ளார். இருவருக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டு வாக்குவாதமாக முற்றியது. இதில் ஆத்திரமான தினேஷ்பாபு, தனது நண்பருடன் சேர்ந்து மாற்றுத்திறனாளி வாலிபர் சரவணனை சரமாரி தாக்கியுள்ளனர். பதிலுக்கு, தினேஷ்பாபுவை தனது ஊன்றுகோலால் சரவணனும் தாக்கியுள்ளார். இதில் இருவரும் காயமடைந்தனர்.

இதை பார்த்து கோயிலுக்கு சாமி கும்பிட வந்த பக்தர்கள் அதிர்ச்சியாகி சிதறி ஓடினர். இச்சந்தர்ப்பத்தில், தாக்குதலில் ஈடுபட்ட தினேஷ்பாபு தப்பியோடி விட்டார். இதுதொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் பல்வேறு சமூகவலை தளங்களில் வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. சங்கர்நகர் போலீசார் தினேஷ்பாபுவின் நண்பரை போலீசார் பிடித்து, தலைமறைவான தினேஷ்பாபு குறித்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.

கடந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்கு வந்த பொழிச்சலூர் அகத்தீஸ்வரர் கோயிலில், கடந்த சில மாதங்களாக பக்தர்கள் அளிக்கும் நன்கொடை, எண்ணெய் மற்றும் சிதறுதேங்காய்களை உரிமை கொண்டாடுவது தொடர்பாக 3 குழுக்களுக்கு இடையே போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. இதுவே தற்சமயம் கோயிலுக்குள் இருந்த மாற்று திறனாளி வாலிபரை ஊராட்சி மன்றத் தலைவரின் மகன் தாக்குதலாக மாறியிருக்கிறது என்று அப்பகுதி மக்கள் தரப்பில் கூறுகின்றனர்.

மேலும், தலைமறைவான ஊராட்சி மன்றத் தலைவர் வனஜாவின் மகன் தினேஷ்பாபுமீது, சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், இவர் சங்கர்நகர் காவல் நிலையத்தில் முன்னாள் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News