தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமெரிக்காவை தாக்கும் வகையில் உலகின் மிக சக்திவாய்ந்த ஏவுகணையை பரிசோதித்த வடகொரியா

Advertisement

பியோங்யாங்: உலகின் மிக சக்திவாய்ந்த ஏவுகணையான ஹ்வாசாங் 19 என்ற ஏவுகணையை வடகொரியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. வடகொரியா நாட்டின் சார்பில் அன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான ஹ்வாசாங் 19 என்ற ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது. இந்த ஏவுகணை 86 நிமிடங்கள் விண்ணில் பறந்து நாட்டின் கிழக்கு கடற்கரையோரத்தில் தரையிறங்கியது. இதுவரை வடகொரியா சோதித்ததில் மிக நீண்ட தூர ஏவுகணை இதுவாகும். ஏவுகணை 7,000 கிமீ உயரத்தை எட்டியது.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அவரது மகள் ஆகியோர் ஏவுகணை ஏவப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். இந்த ஏவுகணை அமெரிக்காவின் எந்தப் பகுதியையும் குறிவைத்து தாக்கும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது. அண்டை நாடான தென்கொரியாவுடனான உறவில் விரிசல் நீடித்து வரும் நிலையில், ஐ.நா.வின் தடைகளை மீறி வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Advertisement