தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்: கட்டிடங்கள் தரைமட்டம்

இஸ்தான்புல்: துருக்கியில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பேரழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அந்நாட்டின் தென்மேற்குப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால், 53,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அண்மையில் அதே பகுதியில் ஜூலை மாதத் தொடக்கத்தில் ஏற்பட்ட 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்தார்; மேலும் 69 பேர் காயமடைந்தனர். இந்தச் சூழலில், துருக்கியின் மேற்குப் பகுதியில் உள்ள சிண்டிர்கி நகரை மையமாகக் கொண்டு, நேற்றிரவு 6.1 ரிக்டர் அளவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தத் தகவலை அந்த நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை உறுதி செய்துள்ளது.

உள்ளூர் நேரப்படி இரவு 7.53 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள், இஸ்தான்புல் மற்றும் முக்கிய சுற்றுலா நகரமான இஸ்மிர் உட்பட நகரங்களில் உணரப்பட்டன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பாலிசேகிர் மாகாணத்தில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்த காட்சிகளைத் துருக்கி ஊடகங்கள் ஒளிபரப்பின. சில நிமிடங்களிலேயே 4.6 ரிக்டர் அளவில் ஒரு நில அதிர்வும் பதிவானது. இதுகுறித்து உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா கூறுகையில், ‘மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஒருவர் பலியாகி உள்ளார்; காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’ என்றார்.

Related News