தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பவர்கிரிட் நிர்வாகத்துக்கு ஆதரவாக இருக்க ரூ. 1.5 லட்சம் லஞ்சம் வாங்கிய உதவி தொழிலாளர் ஆணையர் கைது

புதுச்சேரி: புதுச்சேரி ரெட்டியார்பாளையம், ஜெயா நகர் பகுதியில் ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின், உதவி தொழிலாளர் ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு புதுச்சேரி தொண்டமாநத்தம் பகுதியில் இயங்கி வரும் ஒன்றிய அரசின் பவர் கிரிட் கார்ப்பரேஷனில் நிர்வாகத்துக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்துள்ளது.

Advertisement

அப்போது உதவி தொழிலாளர் ஆணையர் ரமேஷ்குமார், பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிர்வாகத்திடம் பணம் பெற்றுக்கொண்டு, நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து‌ பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சிபிஐக்கு புகார் அனுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த 5 நாட்களாக புதுச்சேரியில் முகாமிட்டிருந்த, சிபிஐ அதிகாரிகள் உதவி தொழிலாளர் ஆணையர் ரமேஷ்குமாரின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று ரூ. 1.5 லட்சம் லஞ்ச பணத்தை பவர் கிரிட் கார்ப்பரேஷன் அதிகாரி‌ ஒருவர், உதவி தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் இருந்த உதவி தொழிலாளர் நல‌ ஆணையர் ரமேஷ்குமாரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் அவரையும், லஞ்சம் கொடுத்த பவர் கிரிட் கார்ப்பரேஷன் அதிகாரியையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

Advertisement