தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஏப்.3ம் தேதி மீண்டும் புதிய உச்சம் 435.85 மில்லியன் யூனிட்டாக மின் நுகர்வு அதிகரிப்பு: மின் வாரியம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் நேற்று முன்தினம் 435.85 மில்லியன் யூனிட் மின் நுகர்வு இருந்ததாக மின் வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஏப்.20ம் தேதி 423.785 மில்லியன் யூனிட் மின் நுகர்வு இருந்தது. இது கடந்த ஆண்டில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச மின் நுகர்வு. ஆனால் இந்த ஆண்டு கடந்த மார்ச் 29ம் தேதியன்றே 426.439 மில்லியன் யூனிட் மின் நுகர்வு இருந்தது.
Advertisement

கோடைகாலம் தொடங்கியது முதல் மின்சார பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.  இந்நிலையில் ஏப்.2ம் தேதி 430.13 மில்லியன் யூனிட் மின் நுகர்வு இருந்தது. தற்போது அதையும் கடந்து நேற்று முன்தினம் (ஏப்.3) 435.85 மி.யூ. மின் நுகர்வு பதிவாகி மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதிகபட்ச மின் நுகர்வு இருந்தாலும் மின் தேவை பூர்த்தி செய்யப்பட்டதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.

மின்வாரியம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், நம் மாநிலத்தின் உச்ச பட்ச மின் நுகர்வு 435.85 மில்லியன் யூனிட் ஆக ஏப்ரல் 3ம் தேதி பதிவானது (முந்தைய உச்சபட்ச நுகர்வு ஏப்.2ம் தேதி, 430.13 மில்லியன் யூனிட்). இதை மின்சார வாரியம் திறம்பட பூர்த்தி செய்து வருகிறது என குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Related News