தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறுவன் வாயில் மதுவை ஊற்றி வீடியோ பதிவு செய்த கொடுமை: 4 பேர் கைது

செய்யாறு: கோயில் திருவிழாவில், சிறுவன் வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றி குடிக்க வைத்து சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த சுமங்கலி கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி இரவு நடந்த அம்மன் ஊர்வலத்தில் அப்பகுதி சிறுவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, அதே கிராமத்தை சேர்ந்த கோழிப்பண்ணை தொழிலாளி செந்தில்குமார்(26), கட்டிட மேஸ்திரி அஜீத்(25), டிராக்டர் டிரைவர் நவீன்குமார்(21) மற்றும் ஐடிஐ படிக்கும் 17 வயது மாணவன் ஆகியோர் ஓரிடத்தில் அமர்ந்து `பீர்’ குடித்தனர். அப்போது, அவ்வழியாக அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் நடந்து சென்றான். அவனை பார்த்த 4 பேரும் அருகே அழைத்து `பீர்’ குடிக்கும்படி கூறினர். ஆனால், சிறுவன் மறுத்துவிட்டு தப்பிச்செல்ல முயன்றான்.
Advertisement

உடனே 4 பேரும் சிறுவனை பிடித்து வலுக்கட்டாயமாக வாயில் பீரை ஊற்றி குடிக்க வைத்தனர். அதை தங்களது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இந்த வீடியோ அப்பகுதி முழுவதும் வைரலாக பரவியது. பாதிக்கப்பட்ட சிறுவன் நடந்த சம்பவத்தை அழுதபடியே பெற்றோரிடம் கூறினான். இதுகுறித்து சிறுவனின் தந்தை மோரணம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, சிறுவனை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்த செந்தில்குமார், அஜீத், நவீன்குமார் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இதில், 17 வயது சிறுவனை கடலூர் சிறார் சிறையிலும், மற்ற 3 பேரையும் வந்தவாசி கிளைச்சிறையிலும் அடைத்தனர்.

Advertisement

Related News