தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்பாக்கம் அருகே இசிஆர் சாலை பாலத்தில் பள்ளம்: விபத்துக்குள்ளாகும் வாகன ஓட்டிகள்

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அருகே இசிஆர் சாலை பாலத்தில் ஏற்பட்ட பெரிய பள்ளத்தால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். சென்னை திருவான்மியூர் முதல் புதுச்சேரி வழியாக கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. வேகமாகவும், போக்குவரத்து இடைஞ்சல் இன்றியும் செல்ல முக்கிய அரசியல் பிரமுகர்கள் முதல் தொழிலதிபர்கள் மற்றும் சாமானியவர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த சாலையைதான் விரும்பி பயன்படுத்தி பயணிக்கின்றனர்.
Advertisement

இந்நிலையில் கல்பாக்கம் அடுத்த வாயலூர் பாலாற்றின் குறுக்கே தரை மட்டத்தில் போடப்பட்டிருந்த பழமையான பாலத்தால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் மழைக் காலத்தில் பாலாற்றில் வெள்ளம் ஏற்படும் போதெல்லாம் இந்த பாலம் மூழ்கி விடும். ஆற்று வெள்ளநீர் வடியும் வரை பழமையான பாலம் மார்க்கத்தில் போக்குவரத்து தடை செய்யப்படும்.

இது தொடர்கதையாக இருந்ததால் இந்த பழமையான பாலத்தை அகற்றிவிட்டு புதிய உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து பொது மக்களும், வாகன ஓட்டிகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பழமையான பாலத்திற்கு அருகில் புதிய உயர் மட்ட பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் பாலத்தின் நடுப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பள்ளம் ஏற்பட்டது. நாளடைவில் அந்த பள்ளம் பெரிய அளவில் ஆகி விட்டதால் அந்த பள்ளத்தில் சிக்கி வாகனங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகின்றன. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் துரித கதியில் பாலத்தில் உள்ள பள்ளத்தை உடனடியாக சரி செய்து சீரமைக்க வேண்டும் என்று பொது மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News