தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொத்தேரி அருகே காவலாளியிடம் தகராறு 6 கல்லூரி மாணவர்கள் கைது

செங்கல்பட்டு: பொத்தேரி அருகே அடுக்குமாடி குடியிருப்பு காவலாளியிடம் தகராறில் ஈடுபட்ட 6 தனியார் கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் 6 இளைஞர்கள் அடுக்குமாடி குடியிருப்பின் நுழைவு வாயிலுக்கு வந்தனர். அங்கிருந்த காவலாளியிடம் உள்ளே நடைபெறும் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு வந்ததாக கூறி உள்ளே செல்ல வேண்டும், என்றனர்.
Advertisement

அப்போது, காவலாளி வருகை பதிவேட்டில் பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்துவிட்டு உள்ளே செல்லுமாறி கூறினார். அப்போது, இளைஞர்கள் சிலர் காவலாளியை அவதூறாக பேசி ரகளையில் ஈடுபட்டதோடு நுழைவு வாயில் கதவை சேதப்படுத்தினர்.இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவலாளி மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 6 இளைஞர்களையும் மடக்கிப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அதில், தகராறில் ஈடுபட்டவர்கள் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நரேஷ்குமார்(18), கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மேகநாதன்(18), சென்னை அசோக்நகர் பகுதியைச் சேர்ந்த ரித்திஷ்(18), திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அபிஷேக்(18) மற்றும் ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த துரைராஜ்(19) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் 6 பேர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement