தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் கழிவுநீர் கால்வாயில் குடிநீர் கலந்து வீணாவதை தடுக்க வலியுறுத்தல்

பள்ளிப்பட்டு: பொதட்டூர்பேட்டையில் வீடுகளில் உள்ள குடிநீர் குழாய் இணைப்பில் இருந்து திறந்து விடப்படும் குடிநீர், அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் வீணாக கலந்து வருகிறது. இவற்றை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
Advertisement

பள்ளிப்பட்டு அருகே பொதட்டூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில், சொரக்காய்பேட்டையில் கொசஸ்தலை ஆற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, மின்மோட்டார் மற்றும் பைப்லைன் மூலமாக வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு, குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

எனினும், வீடுகளில் உள்ள குழாய் இணைப்புகளில் குடிநீரை பிடித்துவிட்டு, அப்படியே குழாய்களை திறந்த நிலையில் வைத்துவிடுகின்றனர். இதனால் அதிலிருந்து வெளியேறும் அதிகளவிலான குடிநீர், அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் வீணாக கலந்து வருகிறது. மேலும் பொதுமக்களில் சிலர் முறைகேடாக மெயின் பைப்லைனில் இருந்து நேரடியாக தண்ணீர் எடுத்து பயன்படுத்துவதும், ஒருசிலர் குடிநீர் குழாய்களில் இருந்து சாலையிலேயே துணி துவைப்பது உள்பட பல்வேறு பணிகளால், பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரை வீணாக்கி வருவது அதிகரித்துள்ளது.

தற்போது கோடை வெயில் தீவிரமாகும் நிலையில், பல்வேறு இடங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. எனினும், பொதட்டூர்பேட்டை பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்த வேண்டிய நீரை வீணாக கழிவுநீர் கால்வாயில் கலப்பதை உடனடியாக தடுக்க வேண்டும். இதுபற்றி பேரூராட்சி ஊழியர்கள் அலட்சியமாக இருப்பதால், எதிர்காலத்தில் இங்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, இவற்றை தடுக்க பேரூராட்சி உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement

Related News