தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதுநிலை நுழைவு தேர்வில் தோல்வி; துப்பாக்கியால் சுட்டு இளம் மருத்துவர் தற்கொலை: பீகாரில் பயங்கரம்

பாட்னா: பீகாரில் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில், இளம் மருத்துவர் ஒருவர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் மருத்துவர் அசுதோஷ் சந்திரா (25), தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவர் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறாததால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது தாய் மற்றும் பாட்டியுடன் சிற்றுண்டி அருந்திய பின்னர், படிப்பதற்காகத் தனது அறைக்குச் சென்றுள்ளார். அங்கு, தனது தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியால் தலையில் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டு குடும்பத்தினர் அவரது அறைக்கு ஓடிச் சென்றுள்ளனர். ஆனால், கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அசுதோஷ் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதக்கு அனுப்பி வைத்தனர். அவரது அறையில் தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும், தேர்வுத் தோல்வியால் ஏற்பட்ட மன அழுத்தமே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

Related News