தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழகத்தின் தவிர்க்க வேண்டிய துயரம் விஜய் ‘அவர் என் முகம் பார்க்க வரலையே’: கரூர் கூட்டத்தில் பலியானவர்கள் கேட்பது போல போஸ்டர்கள்

மதுரை: கரூரில் விஜய் பிரசாரத்தின்போது நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் படங்களுடன், ‘அவர் என் முகம் பார்க்க வரவில்லையே’ என மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் விஜய் பிரசாரத்தின் போது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுக்க கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மதுரை நகரமெங்கும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், ‘தமிழகத்தின் தவிர்க்க வேண்டிய துயரம் விஜய்’ என்ற தலைப்பின் கீழ் விஜய் பிரசார கூட்டத்து நெரிசலில் பலியானவர்களது படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Advertisement

இதற்கு கீழே, ‘யார் முகம் பார்க்க காத்திருந்தேனோ, யாரை முதல்வராக்க உழைத்து, நசுங்கி, மூச்சடைத்து உயிர் துறந்தேனோ, அவரே என் முகம் பார்க்க வரவில்லையே....’ என வாசகம் உள்ளது. மதுரை வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் சார்பில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. விஜய் கூட்ட நெரிசலில் பலியானவர்களே கேள்வி கேட்டு தங்களைக் காண வராத கட்சித் தலைவரிடம் வேதனையை வெளிப்படுத்தும் வகையில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது காண்போரை கலங்க வைத்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போஸ்டர் கிழிப்பு: மதுரையில் கோரிப்பாளையம், பொன்மேனி, தெற்குவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருந்த நிலையில், கிரைம் பிராஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை சிலர் கிழித்தெறிந்தனர்.

Advertisement