தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அஞ்சல் துறையில் வரும் 4ம் தேதி முதல் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம்: மத்திய அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தகவல்

சென்னை: அஞ்சல் துறையில் வரும் 4ம் தேதி முதல் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். அஞ்சல் துறையின் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் 2.0 வரும் 4ம் தேதி முதல் சென்னை மத்திய அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் புதிதாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்ப மென்பொருள் ஒன்றிய அரசின் டிஜிட்டல் இந்தியா கொள்கையின்படி நாட்டின் வளர்ச்சிக்கு துணை செய்வதாக அமையும்.

இந்த மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் சேவையை தடையற்ற மற்றும் பாதுகாப்பான முறையில் செயல்படுத்த வரும் 2ம் தேதி பரிவர்த்தனைகள் இல்லாத நாளாக திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, சென்னை மத்திய அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட தபால் நிலையங்களில் எந்த ஒரு தபால் சேவையும் மேற்கொள்ளப்படாது. புதிய தொழில்நுட்பம் சீராக செயல்படுவதை உறுதி செய்வதற்கு இந்த தற்காலிக சேவை இடைநிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த தவிர்க்க முடியாத ஒரு நாள் சேவை இல்லாத நாள் அனைத்து மக்களுக்கும் மிகச் சிறந்த துரித டிஜிட்டல் சேவைகளை பெற வழி வகுக்க எடுக்கப்பட்டது. ஆகவே பொதுமக்கள் இந்த சேவை இல்லா நாளை கணக்கில் கொண்டு தங்களுடைய அஞ்சல் சேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டு பெறுமாறு அஞ்சல் துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Related News