தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தபால்துறை போல தொடங்கப்படவில்லை லஞ்ச ஒழிப்புத்துறையை 6 மாதத்தில் பலப்படுத்தணும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மதுரை மாவட்டம், எழுமலை அருகே அதிகாரிப்பட்டியைச் சேர்ந்த மலர்விழி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் கணவர் 2022ல் உயிரிழந்தார். அதிகாரிப்பட்டி கிராமத்தில் பரம்பரை சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்கள் மோசடியாக பட்டா மாறுதல் செய்யப்பட்டது. இதை சரி செய்ய வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரூ.2 லட்சத்து ரூ.45 ஆயிரம் லஞ்சம் கொடுத்தும் கூடுதல் பணம் கேட்டதால் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்தேன். எனது புகாரின் மீது வழக்குப்பதிந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
Advertisement

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: லஞ்சம் கேட்பதும், பெறுவதும் பெரும் குற்றமம். இதுதொடர்பாக புகார் வந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். புகார்தாரர் ஆதாரங்களையும், துணை ஆவணங்களையும் அளிக்கவில்லை. இதனால் புகாரை கலெக்டருக்கு அனுப்பினோம் என லஞ்ச ஒழிப்புத்துறை கூறுவது நியாயமல்ல. தபால் துறையை போல் செயல்படுவதற்காக லஞ்ச ஒழிப்புத்துறை தொடங்கப்படவில்லை. இந்த புகார்களை விசாரிக்க தற்போதுள்ள ஊழியர்கள் போதுமானதாக இல்லை. இதனால், ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரித்தும், கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தும் லஞ்ச ஒழிப்புத்துறையை பலப்படுத்த தமிழக அரசு 6 மாதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மோசடியில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Related News