தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அஞ்சலக பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: போலீஸ்காரர் அதிரடி கைது

திருச்சி: திருச்சியில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் போஸ்ட் உமனாக பணியாற்றி வரும் 25வயதான பெண், கடந்த 8ம்தேதி காலை 9மணியளவில் பணி காரணமாக தனது டூ வீலரில் ெபான்மலைக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது, அந்த வழியாக டூ வீலரில் வந்த 32வயதானவர், அந்த இளம்பெண் சென்ற டூ வீலர் முன் குறுக்கே தனது டூ வீலரை நிறுத்தியுள்ளார். தொடர்ந்து, அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

Advertisement

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். இதனையடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், பொன்மலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், அஞ்சலக பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள காணக்கிளியநல்லூர் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் போலீஸ்காரர் கோபாலகிருஷ்ணன்(32) என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து கோபாலகிருஷ்ணனை நேற்று கைது செய்தனர்.

 

Advertisement

Related News