தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மூன்றுக்கு மேல் பெற்றால் பதவி காலி அரசு வேலைக்காக குழந்தையை காட்டில் விட்ட பெற்றோர் கைது

சிந்த்வாரா: மத்தியபிரதேசத்தில் பிறந்து 3 நாள்களேயான குழந்தையை காட்டில் விட்டு சென்ற கொடூரம் நடந்துள்ளது.  மத்தியபிரதேச மாநிலத்தில் அரசு பணியாளர் ஒருவருக்கு, சிவில் சர்வீஸ் விதிகளின்படி, ஜனவரி 26 2001க்கு பிறகு மூன்றாவது குழந்தை பிறந்தால் அவர் அரசு பணிக்கு தகுதி அற்றவராகி விடுவார். இந்நிலையில் சிந்த்வரா மாவட்டத்தை சேர்ந்த தம்பதி பப்லு டான்டோலியா(38), ராஜ்குமார் டான்டோலியா(28). அரசு துவக்க பள்ளியில் பணியாற்றும் இவர்களுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளன.

Advertisement

இவர்களுக்கு கடந்த மாதம் 24ம் தேதி ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் தங்களுக்கு அரசு வேலை போய் விடுமோ என தம்பதிக்கு பயம் வந்துள்ளது. இதனால், அமர்வாரா தாலுக்காவுக்குள்பட்ட நந்தன்வாடி தஹ்டோரி வனப்பகுதியில் பச்சிளம் குழந்தையை விட்டு சென்றுள்ளனர்.

செப்டம்பர் 28ம் தேதி இரவு பச்சிளம் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே அங்கு விரைந்த காவலர்கள், குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், ஈவு, இரக்கமின்றி குழந்தையை காட்டில் விட்டு சென்ற தம்பதியை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News