தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பதவி விலகி 100 நாட்களாக மவுனமாக இருக்கும் ஜெகதீப் தன்கர்: காங். விமர்சனம்

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: இந்திய அரசியல் வரலாற்றில் முன்னோடியில்லாத நிகழ்வு நடந்து சரியாக 100 நாட்கள் ஆகிறது. கடந்த ஜூலை 21ம் தேதி இரவு திடீரென்றும் அதிர்ச்சியூட்டும் விதமாகவும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.  அவர் பிரதமர் மோடி புகழ் பாடிய போதிலும், பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது தெளிவாக தெரிந்தது.

Advertisement

முன்பு தினமும் தலைப்பு செய்திகளில் இடம் பெற்ற முன்னாள் துணை ஜனாதிபதி, பதவி விலகி 100 நாட்களாகிவிட்ட நிலையில் முற்றிலும் மவுனமாகி, பார்க்க முடியாத நிலையில் தென்படாமல் உள்ளார். அவர் நிச்சயம் எதிர்க்கட்சிகளின் சிறந்த நண்பராக இருக்கவில்லை. எதிர்க்கட்சிகளை தொடர்ந்து நியாயமற்ற முறையில் நடத்தினார். ஆனாலும், ஜனநாயக மரபுகளின்படி, அவருக்கு முந்தைய அனைத்து தலைவர்களையும் போலவே குறைந்தபட்சம் பிரியாவிடை விழாவாவது அவருக்கு நடத்தியிருக்க வேண்டும். அது நடக்கவில்லை. இவ்வாறு கூறி உள்ளார்.

Advertisement

Related News