தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

போரூர் - பவர் ஹவுஸ் மெட்ரோ டபுள் டெக்கர் - 95% பணிகள் நிறைவு: அடுத்தாண்டு மத்தியில் போரூர் - பவர் ஹவுஸ் வழித்தடத்தில் போக்குவரத்து தொடங்கும்

சென்னை: போரூர் மற்றும் கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் இடையிலான மெட்ரோ டபுள் டெக்கர் இணைப்பு பணிகள் வரும் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் நிறைவடைந்து விடும் என்றும் அடுத்து ஆண்டு மத்தியில் வழித்தடத்தில் போக்குவரத்து தொடங்கும் என்றும் மெட்ரோ நிறுவனம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை லைட் ஹவுஸிலிருந்து வடபழனி மற்றும் போரூர் வழியாக பூந்தமல்லி வரையிலான 26.1 கி.மீ. 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்தின் 4வது வழித்தடத்தின் ஒரு பகுதியாக போரூர் முதல் பவர் ஹவுஸ் வரையிலான இணைப்பு உள்ளது. போரூர் மற்றும் வடபழனி வழித்தடம் 4 முக்கியமானதாக உள்ளது. ஆழ்வார்திருநகர் மற்றும் ஆலப்பாக்கம் இடையேயான 3.75 கி.மீ. டபுள்டெக்கர் ரயில் பாதை வடபழனி ரயில் நிலையம் மூலம் மற்ற மெட்ரோ வழித்தடங்களுக்கு இணைக்கும் வகையில் அமைக்கப்படுகின்றன. தற்போது போரூர் மற்றும் பவர் ஹவுஸ் இடையே சுமார் 340 தூண்கள் அமைக்க வேண்டியுள்ளதாகவும், அதில் சுமார் 95% பணிகள் நிறைவடைந்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இப்பணிகள் முழுமையாக நிறைவடைந்ததும் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள ஆர்காடு சாலையில் பயணிப்பது எளிதாகிவிடும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் போரூர், கோடம்பாக்கம், பவர் ஹவுஸ், இடையிலான மெட்ரோ டபுள் டெக்கர் இணைப்பு பணிகள் வரும் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் முழுமையாக நிறைவடைந்துவிடும் என்றும் அடுத்தாண்டு மத்தியில் இவ்வழித்தடத்தில் போக்குவரத்து தொடங்கும் என்றும் மெட்ரோ நிறுவனம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Related News