தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆபாசப் படங்களில் நடித்து பணம் சம்பாதித்ததாக புகார் நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்கு

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஸ்வேதா மேனன். இவர், தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஸ்வேதா மேனனுக்கு எதிராக கொச்சியை சேர்ந்த சமூக ஆர்வலரான மார்ட்டின் என்பவர் கொச்சி போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘நடிகை ஸ்வேதா மேனன் ரதிநிர்வேதம், பாலேரி மாணிக்கம் களிமண் உள்பட மலையாளப் படங்களில் ஆபாசமாக நடித்துள்ளார். மேலும் காமசூத்ரா போன்ற ஆணுறை விளம்பரத்திலும் நடித்து பணம் சம்பாதித்துள்ளார். ஆபாசப் படங்களில் நடித்து பணம் சம்பாதித்த நடிகை ஸ்வேதா மேனன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து மார்ட்டின் எர்ணாகுளம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார். இதை விசாரித்த நீதிமன்றம், நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்கு பதிவு செய்ய கொச்சி போலீசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து நடிகை ஸ்வேதா மேனன் மீது கொச்சி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.