தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆபாச வீடியோக்களை அனுப்பி பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை: டெலிவரி மேலாளர் அதிரடி கைது

பெங்களூரு: சமூக வலைதளங்கள் மூலம் பிரபல தொலைக்காட்சி நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்து, ஆபாச வீடியோக்களை அனுப்பி வந்த டெலிவரி மேலாளர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். கன்னடம் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் பிரபல நடிகை ஒருவருக்கு, கடந்த மூன்று மாதங்களாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பேஸ்புக் மெசஞ்சர் வழியாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

Advertisement

பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள நிறுவனத்தில் டெலிவரி மேலாளராக பணிபுரியும் நவீன் கே என்பவரே இந்த செயலில் ஈடுபட்டது பின்னர் தெரியவந்தது. அவர், நடிகைக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளையும், தனது அந்தரங்க உறுப்புகளை காட்டும் வீடியோக்கள் உள்ளிட்ட வக்கிரமான காணொளிகளையும் அனுப்பி வந்துள்ளார். நடிகை, ‘நவீன்ஸ்’ என்ற பெயரிலான அவரது கணக்கை முடக்கியபோது, அவர் பல போலி கணக்குகளை உருவாக்கி தனது வக்கிரச் செயலை தொடர்ந்துள்ளார்.

இந்த தொடர் தொல்லையால் மனமுடைந்த நடிகை, கடந்த 1ம் தேதி நாகர்பாவி பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு நவீனை வரவழைத்து, தனது செயல்களை நிறுத்திக்கொள்ளுமாறு நேரில் கண்டித்துள்ளார். ஆனால், நடிகையின் எச்சரிக்கையை புறக்கணித்த நவீன், அவரிடம் மிகவும் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நடிகை உடனடியாக அன்னபூர்ணேஸ்வரி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நவீனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர் மீது பாலியல் துன்புறுத்தல், பின்தொடர்ந்து தொல்லை கொடுத்தல் உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement

Related News