தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆண்களை குறிவைத்து காதல் வலை விரித்த பிரபல சமூக வலைதள பெண் கைது: லட்சக்கணக்கில் பணம் பறித்தது அம்பலம்

சிகர்: போக்சோ உள்ளிட்ட பொய் வழக்குகளில் சிக்குவதாக மிரட்டி ஆண்களிடம் பணம் பறித்த இன்ஃப்ளூயன்ஸர் பெண் கைது செய்யப்பட்டார். ராஜஸ்தான் மாநிலம் சிகர் பகுதியை சேர்ந்தவர் ரேணுகா சவுத்ரி (35), தன்னை சமூக வலைதளங்களில் ஒரு பிரபலமாக காட்டிக்கொண்டு ஆண்களை குறிவைத்து பழகி வந்துள்ளார். அவர்களிடம் நன்கு நெருங்கி பழகிய பின்னர், போக்சோ உள்ளிட்ட பல்வேறு பொய் வழக்குகளை பதிவு செய்துவிடுவதாக மிரட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்த காதல் வலையில் சிக்கிய 64 வயது முதியவர் ஒருவரிடம் இருந்து 12 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மற்றும் தங்க நகைகளையும், அரசு மருத்துவர் ஒருவரிடமும் இதே பாணியில் மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்துள்ளது.

Advertisement

பாதிக்கப்பட்டவர்கள் அளித்த தொடர் புகார்களின் அடிப்படையில் காவல்துறையினர் ரேணுகா சவுத்ரியை கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது காவல்துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது போலவும், திடீரென மயங்கி விழுவது போலவும் அவர் நாடகமாடியுள்ளார். ஆனால், அவரது நாடகத்தை நம்பாத காவல்துறையினர் ரேணுகாவை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இந்த மோசடியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, மேலும் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் உள்ளனரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News