தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாங்காடு அருகே தேங்கி இருந்த மழை நீரில் மூழ்கி இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு..!!

பூவிருந்தமல்லி: பூவிருந்தமல்லி அருகே மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திப்குமார். இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர்களுக்கு இரண்டரை வயதில் பிரணிகாஸ்ரீ என்ற மகள் உள்ளார். பிரியதர்ஷினி அம்பத்தூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை பிரிய தர்ஷினி, தனது மகள் பிரணிகாஸ்ரீயுடன் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு பிரியதர்ஷினி எழுந்து பார்த்தபோது அருகில் இருந்த மகள் காணவில்லை . அதிர்ச்சி அடைந்த அவர். வீட்டின் வெளியே வந்து தேடியபோது அருகில் உள்ள காலி மைதானத்தில் தேங்கிய மழைநீரில் மகள் பிரணிகாஸ்ரீ கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

Advertisement

உடனடியாக மகளை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் பிரணிகாஸ்ரீ இறந்து விட்டதாக தெரிவித்தனர்.வீட்டில் தாயுடன் தூங்கியபோது எழுந்த பிரணிகாஸ்ரீ விளையாடுவதற்காக வீட்டின் வெளியே வந்து உள்ளார். அப்போது வீட்டின் அருகே தேங்கி இருந்த மழைநீரில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் பலியான குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை பிரணிகா ஸ்ரீ உயிரிழப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisement