தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் மதியம் உபரி நீர் திறப்பு: முதல் கட்டமாக வினாடிக்கு 700 கன அடி நீர் திறக்கப்படுவதாக தகவல்

திருவள்ளூர்: பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் இன்று நீர்திறப்பு அதிகரிக்கப்பட உள்ளது. ஆந்திரா மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஆந்திராவில் உள்ள அம்மம்பள்ளி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீர் ஆனது, பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் வந்து கொண்டிருப்பதினாலும், பூண்டி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கமானது முழு கொள்ளளவை எட்ட இருப்பதால் முதல் கட்டமாக கொசஸ்தலை ஆற்றுக்கு 700 கன அடி நீர் இன்று மதியம் திறக்கப்படவுள்ளது.

Advertisement

இதனால் கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள மக்களுக்கு மாவட்ட நிறுவகம் சார்பில் முதல் கட்ட அபயா எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக அணை பாதுகாப்பு கருதி இன்று மதியம் நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்றைய தினம் பூண்டி ஏரிக்கு 1980 கன அடி நீரானது வந்து கொண்டிருந்தது. அது இன்றிய தினம் 2010 கன அடியாக அதிகரித்துள்ளது. அதுபோன்று கிருஷ்ணா நதிக்கு நீர் வராது 270 கன அடியாக உள்ளது. இந்த ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரி குடிநீர் தேவைக்காக 700 கன அடியானது தினம் தோறும் அனுப்பப்பட்டு வருகின்றது.

அதுபோன்று சென்னை குடிநீர் தேவைக்காக மெட்ரோ வாட்டருக்கு 47 கன அடியானது நீர் திறக்கப்படுகிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 35 அடியில் 34.74 அடி உயரத்தில் நீர் இருப்பு இருந்து கொண்டு இருக்கிறது. 99 சதவீதம் நீரானது ஏரியில் நிரம்பி இருப்பதால் அணை பாதுகாப்பு கருதி இன்று மதியம் முதல் கட்டமாக 700 கன அடி உபரி நீரானது கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டு அது தாம்பரம் பக்கம் அணை காட்டில் தேக்கம் வைக்கப்பட்டு சோழவரம் ஏரிக்கு அனுப்பப்பட உள்ளதாக நீர் வரை துறை அதிகாரிகளான தகவல் தெரிவிக்கின்றனர்.

Advertisement