தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பூந்தமல்லியில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்ற வாலிபர் கைது: 10 கிலோ பறிமுதல்

பூந்தமல்லி: பூந்தமல்லியில் கஞ்சா வைத்திருந்த வடமாநில வாலிபரை நேற்று மாலை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரது சூட்கேசில் இருந்து 10 கிலோ கஞ்சா பார்சல் பறிமுதல் செய்யப்பட்டது. பூந்தமல்லி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, நேற்று பூந்தமல்லி, குமணன்சாவடி பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் சுபாஷினி தலைமையில் எஸ்ஐ நாட்டாளம்மை மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

Advertisement

அப்போது அப்பகுதியில் சந்தேக நிலையில் ஒரு வடமாநில வாலிபர் கையில் சூட்கேசுடன் சுற்றி திரிவதை போலீசார் கண்டறிந்தனர். அவரது சூட்கேசை போலீசார் சோதனை செய்தனர். அதற்குள் 10 கிலோ கஞ்சா பார்சல் இருந்தது. விசாரணையில், அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கனாநாத் மாலிக் (33) என்பதும், இவர் ஒடிசாவில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி, ரயிலில் கடத்தி வந்து, பூந்தமல்லி பகுதியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது. அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News