தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அந்நியர் ஆதிக்க எதிர்ப்பின் பெருமைமிகு தமிழ் அடையாளம் பூலித்தேவர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!!

சென்னை: மாமன்னர் பூலித்தேவனின் 310வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவரது வீரத்தையும், தியாகத்தையும் நினைவுகூர்ந்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவில் கூறியதாவது;

Advertisement

அந்நியர் ஆதிக்க எதிர்ப்பின் பெருமைமிகு தமிழ் அடையாளமான பூலித்தேவர் அவர்களின் பிறந்தநாள்!

சிப்பாய்ப் புரட்சிக்கும் நூறாண்டுகளுக்கு முன்பே தமிழ்நிலத்தில் புரட்சி வெடித்துவிட்டது! தென்னகம் அந்நியருக்குப் பட்டா போட்டு தரப்படவில்லை எனப் பறைசாற்றும் விதமாகப் போரிட்டு, இந்திய விடுதலைப் போராட்டத்துக்கான தொடக்கவுரை எழுதிய பூலித்தேவரின் புகழ் போற்றுகிறேன்!. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு;

பாரதத் தாயின் வீர மகன் பூலித்தேவரின் பிறந்தநாளில், தேசம் அவருக்கு உளமாற மரியாதை செலுத்துகிறது. தொலைநோக்குப் பார்வைமிக்க தலைவர், சாதுர்யமான உத்திவகுப்பாளர் மற்றும் அச்சமற்ற போர்வீரரான அவர் கொடுங்கோல் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக உறுதிபட நின்று, பாரத விடுதலைக்கான ஆரம்பகால மற்றும் மிகவும் வலிமையான போராட்டங்களில் ஒன்றை வழிநடத்தினார்.

அவரது லட்சியங்கள், தியாகங்கள் மற்றும் மரபுகள், விடுதலை போராட்டத்துக்கு வலுவான அடித்தளமிட்ட இடைவிடாத போராட்டத்தில் மக்களை ஒன்றிணைத்தன. அவை நீடித்த வலிமையின் மூலாதாரமாகத் தொடர்ந்து வலுவான, மீள்தன்மை மற்றும் வளமான வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான நமது தேசிய உறுதிப்பாட்டை ஊக்குவிக்கின்றன. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News