தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆளுக்கொரு பொண்டாட்டி இலவசம் என பேச்சு அதிமுக எம்பியை கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: ஆளுக்கொரு பொண்டாட்டி இலவசம் என பேசிய அதிமுக எம்பியை கண்டித்து, மாதர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். விழுப்புரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அக்கட்சி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்பி, தேர்தல் நெருங்குது... பல அறிவிப்புகள் வரும். மிக்சி, கிரைண்டர், ஆடு, மாடு என்ற இலவச திட்டத்தோடு ஆளுக்கொரு பொண்டாட்டியை கூட இலவசமாக கொடுப்பார்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

Advertisement

அரசின் இலவச திட்டங்களோடு, பெண்களை இழிவுபடுத்தி பேசிய சி.வி.சண்முகம் எம்பியை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேற்று விழுப்புரம் நகராட்சி திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநில துணைசெயலாளர் மேரி கூறுகையில், ‘சி.வி.சண்முகம் பெண்களை இழிவாக பேசியதை கண்டிக்கிறோம். முதலமைச்சர் பெண்களுக்கு பல இலவச திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியிருக்கிறார்.

இதனால் பெண்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. இந்த இலவச திட்டங்களோடு, தேர்தல் காலங்களில் பொண்டாட்டியை இலவசமாக கொடுப்பதாக சி.வி.சண்முகம் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. பெண்கள் என்ன போதை பொருளா, இலவச பொருளா. பெண்களை துச்சப்படுத்தி ஆணாதிக்கம் என்ற சமுதாயத்தை காட்டியிருக்கிறார். எனவே, சி.வி.சண்முகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து சி.வி.சண்முகத்திற்கு எதிராக பெண்கள் கோஷமிட்டனர்.

Advertisement

Related News