தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாக்குச்சாவடி அதிகாரிகள் ஊதியம் இரட்டிப்பானது: அரசாணை வெளியீடு

சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள், வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கான ஆண்டு ஊதியம் இரட்டிப்பாக அதிகரிப்பதற்கான தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வாக்காளர் பட்டியல்களை தயாரித்தல் மற்றும் திருத்துதல் பணிகளில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (பிஎல்ஓ) மற்றும் வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்கள் ஆகியோரின் ஆண்டு ஊதியத்தை உயர்த்தி தேர்தல் ஆணையம் கடந்த ஜூலை 8ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி, 2015ம் ஆண்டு பிஎல்ஓக்களுக்கு ரூ.6 ஆயிரம் ஆண்டு ஊதியம் வழங்கப்பட்ட நிலையில், இது ரூ.12 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது. இதே போல வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் ரூ12 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது. மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அல்லது வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு ஊக்கத்தொகை ரூ.1,000ல் இருந்து ரூ.2 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது. தற்போது இந்த ஊதிய உயர்வுக்கான தமிழக அரசு அரசாணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு 2025-26ம் நிதியாண்டிலிருந்து வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement