தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

35 ஆண்டில் இல்லாத வாக்குப்பதிவு: காஷ்மீரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல், தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: காஷ்மீரில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு அதிகரித்திருப்பதாகவும், இதன் மூலம் சட்டப்பேரவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் மிக விரைவில் தொடங்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் 5 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் 5 கட்டமாக கடந்த 25ம் தேதி நிறைவடைந்தது.
Advertisement

இதில், ஸ்ரீநகர் தொகுதியில் 38.39 சதவீத வாக்குப்பதிவும், பாராமுல்லாவில் 59.1 சதவீதம், அனந்த்நக்-ரஜோரியில் 54.84 சதவீதம், உதம்பூரில் 68.27 சதவீதம் ஜம்முவில் 72.22 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இது கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு சதவீதமாகும்.

இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அளித்துள்ள பேட்டியில், ‘‘மக்களவை தேர்தல் மூலம் ஜம்மு காஷ்மீரில் இளைஞர்கள் ஜனநாயகத்தின் மீது அதிகப்படியான நம்பிக்கை கொண்டிருப்பதை உறுதிபடுத்தி உள்ளனர். காஷ்மீரில் ஜனநாயக செயல்முறை தொடர்ந்து செழித்து வருவது, விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவதற்கான சாதகமான சூழலை ஏற்படுத்தி ஊக்கமளித்துள்ளது. எனவே காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவதற்கான செயல்முறையை தேர்தல் ஆணையம் மிக விரைவில் தொடங்கும்’’ என்றார்.

Advertisement