தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோடை காலம் முடிந்தும் விலை குறையாத பொள்ளாச்சி இளநீர்

Advertisement

ஆனைமலை: கோடை காலம் முடிந்து தென்மேற்கு பருமழை தொடங்கி உள்ளபோதும் பொள்ளாச்சி இளநீர் குறையவில்லை. இதனால், விவசாயிகள் உற்சாகத்தில் உள்ளனர். பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தென்னைகளில் உற்பத்தியாகும் பச்சை நிற இளநீர் மற்றும் செவ்விளநீர் உள்ளிட்டவைக்கு அதிக கிராக்கி உள்ளது. இதில், இந்த ஆண்டு மே மாதம் துவக்கம் வரையிலும் கோடை வெயிலின் தாக்கத்தின்போது, பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார பகுதியிலிருந்து லாரி மற்றும் டெம்போக்கள் மூலம் வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் இளநீர் அதிகளவு அனுப்பப்பட்டது.

பொள்ளாச்சி இளநீருக்கு அதிக கிராக்கி என்பதால், சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு வரை தோட்டங்களில் நேரடி விலையாக இளநீரை ரூ.48 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருமழை தொடங்கியது. இதனால், பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் இளநீர் உற்பத்தி கடந்த ஆண்டைவிட குறைவாக உள்ளது. இதனால், வெளி மாவட்டங்களுக்கு குறைந்த அளவே இளநீர் அனுப்பப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் கர்நாடக மாநில பகுதிக்கு இளநீர் தேவை அதிகமாக உள்ளது. இதனால், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் இருந்து அனுப்பப்படும் இளநீர் விலை தொடர்ந்து உயர்வாக உள்ளது.

இதில் நேற்றைய நிலவரப்படி பண்ணை விலையாக ஒரு இளநீர் ரூ.47 வரை விற்பனையானது. பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில், இன்னும் சில மாதங்களில் இளநீர் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அப்போது விலை சரிய வாய்ப்புள்ளது என வியாபாரிகள் கூறினர்.

Advertisement

Related News