தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொள்ளாச்சி சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவு

*வியாபாரிகள் வேதனை
Advertisement

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவாக இருந்தாலும், மழையால் விற்பனை மந்தமானது என வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சியில் உள்ள மாட்டு சந்தைக்கு, வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சுற்றுவட்டார பகுதி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும். வெளி மாநிலங்களிலிருந்தும் விற்பனைக்காக மாடுகள் கொண்டு வரப்படுகிறது.

இந்த மாதத்தில் கடந்த இரண்டு வாரமாக சந்தைக்கு மாடுகள் வரத்து ஓரளவு இருந்துள்ளது. ஆனால், இந்த வாரத்தில், நேற்று நடந்த சந்தையின்போது வெளி மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாடுகள் வரத்து குறைவாகவே இருந்தது.

சுமார் 800-க்கும் குறைவான மாடுகள் வரபெற்றாலும், கேரள மாநில பகுதியில் பரவலான மழையால், அம்மாநில பகுதியில் இருந்து வியாபாரிகள் வருகை குறைந்ததாக கூறப்படுகிறது. இதனால், நேற்று கேரள மாநில பகுதி மட்டுமின்றி தமிழ்நாடு பகுதியில் இருந்தும் வியாபாரிகள் வருகை குறைவால், விற்பனை மந்தமானது. மேலும், கடந்த வாரத்தை விட, மாடுகள் விலை சற்று குறைவானது.

இதில் காளை மாடு முதல் ரூ.45 ஆயிரத்துக்கும், எருமை மாடு ரூ.40 ஆயிரத்துக்கும், பசு மாடு ரூ.38 ஆயிரத்துக்கும், ஆந்திரா காளை மாடுகள் ரூ.50 ஆயிரம் வரையிலும். கன்றுக்குட்டிகள் ரூ.13 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலும் என கடந்த வாரத்தை விட, ஒவ்வொரு மாடுகளும் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரையிலும் குறைவான விலைக்கு விற்பனையானது என வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

சேற்றில் சிக்கிய சரக்கு ஆட்டோ

மாட்டுச்சந்தைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வாரம் தோறும், வாகனங்களில் மாடுகள் கொண்டு வரப்பட்டாலும், அங்கு போதிய சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறைவால், வியாபாரிகள் வேதனையடைந்துள்ளனர்.

மழை பெய்ததால் அப்பகுதி சேறும் சகதியுமானது. நேற்று களி மண் கலந்த சேற்றில், சரக்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சிக்கி தவித்தது. இந்த நிலை நீடித்தால், பிரதான சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்து வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை எற்படும் என வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்னர்.

Advertisement