தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு வாழைத்தார் வரத்து அதிகம்

*கூடுதல் விலைக்கு விற்பனை

Advertisement

பொள்ளாச்சி : பொள்ளாச்சி காந்தி தினசரி மார்க்கெட்டின் ஒரு பகுதியில், வாரத்தில் ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில் வாழைத்தார் கிலோ கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது.

சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்தும் வாழைத்தார்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

கடந்த 2 வாரமாக அவ்வப்போது மழையால், சுற்றுவட்டார பகுதியில் இருந்து மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் வாழைத்தார்களின் வரத்து சற்று குறைவானது. இருப்பினும் சுப முகூர்த்தம் உள்ளிட்ட விசேஷ நாட்கள் இல்லாததால், அனைத்து ரக வாழைத்தார்களும் குறைவான விலைக்கே விற்பனையானது.

இந்நிலையில், இந்த வாரத்தில் நேற்று நடந்த சந்தை நாளின்போது, பொள்ளாச்சி மற்றும் சேத்துமடை, ஆனைமலை, ஒடையக்குளம் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் தூத்துக்குடி, கரூர், திருச்சி உள்ளிட்ட வெளியூர்களில் இருந்தும் வாழைத்தார் வரத்து அதிகமாக இருந்தது. வரத்து அதிகமாக இருந்தாலும், அனைத்து ரக வாழைத்தார்களும், இன்று (27ம் தேதி) மற்றும் வரும் 31ம் தேதி என இந்த வாரத்தில் அடுத்தடுத்து முகூர்த்த நாட்களாக இருப்பதால், கூடுதல் விலை நிர்ணயித்து விலை போனது.

செவ்வாழை தார் ஒன்று (கிலோ கணக்கில்) ரூ.65 வரையிலும், சாம்ராணி ரூ.42க்கும், பூவந்தார் ரூ.38க்கும், மோரீஸ் ரூ.38 க்கும், ரஸ்தாளி ரூ.45க்கும், நேந்திரன் 1 கிலோ ரூ.42க்கும், கேரள ரஸ்தாளி ஒரு கிலோ ரூ.500க்கு என கூடுதல் விலைக்கு ஏலம் போனது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News