தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கவியருவியில் கொட்டும் தண்ணீர் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று முதல் அனுமதி

*வனத்துறை அதிகாரிகள் தகவல்

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த சுற்றுலா பகுதியில் ஒன்றான ஆழியாருக்கு வரும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் பலரும்,கவியருவிக்கு சென்று குளித்து மகிழ்கின்றனர். கடந்த ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை அடுத்தடுத்து பெய்ததால், இந்த ஆண்டில் ஜனவரி இறுதி வரையிலும் தண்ணீர் வரத்து தொடர்ந்திருந்தது.

பின் வெயிலின் தாக்கம் அதிகரித்து வறட்சியால் கவிருவியில் தண்ணீர் வரத்தின்றி வெறும் பாறையானது. இதனால், பிப்ரவரி 3ம் தேதி முதல் கவியருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்த பருவமழையால், கவியருவியில் தண்ணீர் வரத்து அதிகமானது. சிலநாட்களில் காட்டாற்று வெள்ளபோல்நீர் ஆக்ரோஷமாக ஓடியது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வப்போது பருவமழை பெய்து வந்ததாலும், அருவியில் கொட்டும் தண்ணீரின் அளவும் குறைய துவங்கி ரம்மியமாக உள்ளது.

இதையடுத்து, சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்க வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டது.இந்நிலையில், சில மாதத்திற்கு பிறகு கவியருவியில் குளிப்பதற்கான தடை நீக்கப்பட்டு, இன்று (6ம் தேதி) முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது என வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related News