தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொள்ளாச்சி பஸ் நிலையம் அருகே குழாய் உடைந்து வெளியேறிய குடிநீர்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளைம் வழியாக செல்லும் ஆழியாற்றிலிருந்து தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு பின் பிரதான குழாய் வழியாக மார்க்கெட் ரோட்டில் உள்ள நீரூற்று நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர், மகாலிங்கபுரம், கேஆர்ஜிபி நகர், கந்தசாமி நகராட்சி பூங்கா உள்ளிட்ட இடங்களில் உள்ள மேல்நிலை தொட்டிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
Advertisement

பின்னர், மேல்நிலை தொட்டியிலிருந்து குறிப்பிட்ட சில நாட்களுக்கு ஒரு முறை அந்தந்த வார்டு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதியம், மார்க்கெட் ரோட்டில் உள்ள நீரூற்று நிலையத்திலிருந்து மேல்நிலை தொட்டிகளுக்கு பிரதான குழாய் மூலம் கொண்டுவரப்பட்ட தண்ணீரானது, மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் திடீர் என உடைப்பு ஏற்பட்டது.

முதலில் லேசாக கசிந்தவாறு சென்ற தண்ணீரானது, நேரம் செல்ல செல்ல பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டு ஆறுபோல் ரோட்டில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இதையறிந்த நகராட்சி அதிகாரிகள் தண்ணீர் நீரேற்றத்தை நிறுத்தினர். பின்னர், சிறிது நேரத்தில், பொக்லைன் இயந்திரம் கொண்டு உடைப்பு ஏற்பட்ட பகுதியை தோண்டினர். சுமார் 5அடி ஆழத்துக்கு தோட்டப்பட்டு, அதில் ஏற்பட்ட பழுதுகளை கண்டறிந்து, பின் சில மணிநேரத்தில், குழாய் சீரமைக்கப்பட்டு, அதில் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News