தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொள்ளாச்சி, ஆனைமலை பள்ளிகளில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு

Advertisement

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை தாலுகாவிற்குட்பட்ட பல்வேறு அரசு துறை அலுவலகங்களில் மட்டுமின்றி, அரசு பள்ளிகளிலும் நேற்று குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், வடக்கு ஒன்றியம் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நேற்று குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை தாங்கினார். இதையடுத்து, மாணவர்களுக்கு குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி, கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டோம். குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்போம்.

குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலும் அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் உள்ளிட்ட பல்வேறு வாசகங்களுடன் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பற்றிய உறுதிமொழி எடுக்கப்பட்டது.

பொள்ளாச்சியை அடுத்த சேத்துமடை அண்ணா நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

மேலும், 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அனுப்பக்கூடாது. அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன் அது குறித்த துண்டு பிரசுரமும் அளிக்கப்பட்டது.

Advertisement