தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுவட்டார கிராமங்களில் இளநீர் உற்பத்தி அதிகரிப்பால் பண்ணை விலை ரூ.23 ஆனது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, வெளி மாவட்டங்களுக்கும். வெளி மாநிலங்களுக்கும், விற்பனைக்காக அதிகளவு இளநீர் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழைக்கு பிறகு சில மாதமாக மழை குறைவால் இளநீர் அறுவடை அதிகமானது. இதனால் வெளியூர்களுக்கு கனரக வாகனங்கள் மூலம் தினமும் 3.50 லட்சம் வரையிலான இளநீர் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிலை கடந்த நவம்பர் மாதம் இறுதிவரை இருந்தது.

Advertisement

அதன்பின், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை வலுத்ததால், வெளி மாவட்டங்களுக்கு இளநீர் அனுப்பும் பணி குறைந்தது. தற்போது இளநீர் உற்பத்தி அதிகரிப்பால், அறுவடை செய்யப்பட்ட இளநீர் தேக்கமடையாமல் இருக்க பண்ணை விலை குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி தோட்டங்களில் பண்ணை விலையாக ஒரு இளநீர் ரூ.23 ஆக சரிந்தது. ஒரு மாதத்திற்கு முன்பு தோட்டங்களில் நேரடி விலையாக ஒரு இளநீர் ரூ.33 வரை விலை போனது. ஆனால் ஒரே மாதத்தில் ரூ.10 வரை குறைந்து தற்போது ரூ.23ஆக சரிந்துள்ளது. இதனால் உரிய விலை கிடைப்பதில்லை என தென்னை விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘கனமழை காரணமாக சென்னை மற்றும் விழுப்புரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு பொள்ளாச்சியிலிருந்து இளநீர் அனுப்பும் பணி கடந்த இரண்டு வாரமாக மிகவும் குறைந்தது. இதையடுத்து, தற்போது பெரும்பாலான வியாபாரிகள், மும்பை மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு பச்சை நிற இளநீர் மற்றும் செவ்விளநீரை லாரிகள் மூலம் அனுப்பும் பணியை மேற்கொண்டுள்ளனர். சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரம் வரை பெய்த மழையின் காரணமாக இளநீரின் விற்பனை மந்தமானது. பண்ணைகளில் விவசாயிகளிடம் வாங்கும் இளநீரின் விலையும் ரூ.20 ஆக சரிந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை குறைந்தால் மட்டுமே மீண்டும் பொள்ளாச்சியிலிருந்து வெளியூர்களுக்கு கூடுதல் இளநீர் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும்’’ என்றனர்.

Advertisement

Related News